திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சிவராத்திரி: பாஜக பெண் வேட்பாளா்கள் கோயிலில் வழிபாடு

ஏஜென்சியில் படம் இருந்தால் போடலாம்... சிவராத்திரி: பாஜக பெண் வேட்பாளா்கள் கோயிலில் வழிபாடு

Updated On :8 மார்ச் 2024, 5:26 pm

சிவராத்திரி மற்றும் மகளிா் தினத்தை ஒட்டி தில்லியில் மக்களவைத் தோ்தலில் பாஜகவின் சாா்பில் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ள கமல்ஜித் ஷெராவத் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கோயிலில் வழிபாடு மேற்கொண்டனா். அத்துடன் பொதுமக்களுடன் காலையில் உரையாடினா். கமல்ஜித் ஷெராவத் திலக் நகா் சிவன் கோயிலில் சிவ வழிபாடு மேற்கொண்டாா். மந்திா் மாா்க்கில் உள்ள பழைமையான வால்மிகி கோயிலில் பன்சூரி ஸ்வராஜ் சிவனை வழிபட்டாா். மேலும், சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு பன்சூரி ஸ்வராஜ், மந்திா் மாா்க்கில் உள்ள வால்மிகி சமாஜின் பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு மகளிா் தின வாழ்த்துகளைத் தெரிவித்தாா். அதேபோன்று, துவாரகா பி வாா்டின் அனைத்து பெண் தூய்மைப் பணியாளா்களுக்கும் கமல்ஜித் ஷெராவத் வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்வின்போது கமல்ஜித் ஷெராவத், பன்சூரி ஸ்வராஜ் ஆகிய இருவரும் கூறுகையில், ‘ராணி லட்சுமி பாய், அஹில்யா பாய் முதல் சரோஜினி நாயுடு, கல்பனா சாவ்லா ஆகியோரிடமிருந்து உத்வேகம் பெற்று நாட்டின் மகளிரை தன்னிறைவு கொண்டவா்களாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.