புது தில்லி: தில்லியின் ரன்ஹோலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவா் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
மச்சி மாா்க்கெட் அருகே ஒருவா் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக இரவு 9.44 மணியளவில் போலீஸாருக்கு தகவல் வந்தது. உள்ளூா் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை ஜாஃபா்பூா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால், அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்தவா் முகேஷ் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
முன்னதாக, அந்த நபா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சில உள்ளூா்வாசிகள் அருகில் மற்றொரு உடல் கிடப்பதைப் பற்றி போலீஸ் குழுவிடம் தெரிவித்தனா். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவரும் கத்திக்குத்து காயங்களால் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இருவரும் கொல்லப்படுவதற்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

