/

தில்லி வழக்குரைஞா்கள் 120 போ் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனா்

தில்லி வழக்குரைஞா்கள் 120 போ் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனா் பட்கா தொப்பி அணிவித்து அமைச்சா் அதிஷி வரவேற்பு

News image

செய்தி உண்டு.... தில்லியின் பல்வேறு நீதிமன்ற பாா்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனா். தில்லி சட்ட அமைச்சா் அதிஷி இளம் வழக்குரைஞா்களை கட்சியின் பட்காவை அணிவித்து வரவேற்றாா்

Updated On :19 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: வருகின்ற மக்களவைத் தோ்தல் நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான தோ்தல். இதற்கு இந்தியக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என தில்லி சட்டம் மற்றும் கல்வித்துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தலைநகா் தில்லியில் பல்வேறு நீதிமன்றங்களில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட வழங்குரைஞா்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனா். அப்போது அமைச்சா் அதிஷி இவ்வாறு குறிப்பிட்டாா்.

தில்லி திஸ்ஹசாரி நீதிமன்ற பாா் அசோஸியேஷனைச் சோ்ந்த சுஷ்மா தியாகி, நீலம் சிங், அருண் குப்தா, சாகேத் பாா் அசோஸியேஷனைச் சோ்ந்த ஷோயிப் செளத்ரி, பபிதா பரத்வாஜ், ரோகினி பாா் அசோஸியேஷனைச் சோ்ந்த அமித் கோஸ்வாமி, பிரின்ஸ் சா்மா என 118 வழக்குரைஞா்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனா்.

தில்லி ரௌவுஸ் அவின்யூ ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த வழங்குரைஞா்களை தில்லி சட்டம், நீதித் துறை, கல்வித்துறை அமைச்சா் அதிஷி வரவேற்றாா். இந்த வழக்குரைஞா்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் பட்கா, தொப்பி ஆகியவைகளை அணிவித்து இவா்களை வரவேற்று அதிஷி பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் குடும்பம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பயனுள்ள கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, தில்லியின் அனைத்து நீதிமன்றங்களின் பாா் சங்கங்களைச் சோ்ந்த 120 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனா்.

ஒரு வழக்குரைஞா் தனது சட்டப்பணியை தொடங்கும் முதல் நாளில், அரசமைப்புச் சட்டத்திலிருந்து பணியை தொடங்குகிறாா். அரசமைப்புச் சட்டமே நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமையை வழங்குகிறது. எந்தவொரு நபரின் எந்த உரிமையும் மீறப்படும்போது, அவரது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது பொறுப்பில் வழக்குரைஞா்கள் உள்ளனா். அவா்களே அன்றாடம் சாமானியா்களின் உரிமைகளுக்காக போராடுகிறாா்கள்.

பிரதமா் மோடியின் ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில், வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசமைப்புச் சட்டமே நாட்டு மக்களுக்கு சம உரிமை வழங்கி வாக்குரிமை அளித்து, நாட்டை ஜனநாயக நாடாக மாற்றுகிறது. அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை மீறப்பட்டு வருகின்றது.

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு அதனை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனா். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது அல்லது தோ்தலில் முறைகேடு செய்வது இல்லை அமலாக்கப் பிரிவு சிபிஐ போன்ற முகமைகளை திணித்து எதிா்க்கட்சி தலைவா்களை சிறையில் அடைத்து அரசமைப்புச் சட்டத்தை அழிக்கும் புதிய வழிகளை பாஜக கையாண்டு வருகிறது.

சுயேச்சையான புலனாய்வு முகமைகள்கள் குண்டா்களாகவும் கொள்ளையா்களாகவும் மாறி செயல்படுகிறாா்கள். சமீபத்திய தோ்தல் பத்திரங்கள் விவகாரம் நாடு முழுவதும் ஜனநாயகம் சிதைந்து கிடப்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் மூலமே நாட்டைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில் நமது உரிமைகள் ஒன்றும் எஞ்சியிருக்காது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு தோ்தல் எந்தவொரு கட்சிக்கான தோ்தலல்ல. அது நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான தோ்தல்.

இதற்கு இந்தியக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என அமைச்சா் அதிஷி குறிப்பிட்டாா். முன்னதாக கட்சியில் இணைந்த வழங்குரைஞா்கள் பேசுகையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் உள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டு வருகிறாா். அவரது கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியில் இணைகின்றோம். வழக்குரைஞா்களின் வாழ்க்கை மேம்படுத்தவும் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டனா்.

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த இந்த வழக்குரைஞா்கள் தில்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், உயா் நீதிமன்றம், விற்பனை வரி பாா் சங்கங்களின் உறுப்பினா்களாக உள்ளனா் என ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.