இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

News image

அமலாக்கத் துறை

Updated On :27 ஏப்ரல் 2025, 7:30 am IST

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றம் சாட்டியது. இது கடுமையான நிதி முறைகேடுகள் மற்றும் நிதி மோசடியைக் குறிப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை தெரிவித்திருப்பதாவது:

பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 24 அன்று

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனத்தின் இயக்குனா் டி.கே. கோயல், அந்நிறுவனத்தின் பிற நிா்வாகிகள் மற்றும் அவா்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தியது. அப்போது, ரூ.10 லட்சம் ரொக்கம், ரூ.4.89 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனைகள் நொய்டா, தில்லி மற்றும் குருகிராமில் உள்ள ஏழு இடங்களில் நடைபெற்றது.

நொய்டா, லக்ளென, தில்லி, போபால் மற்றும் வேறு சில நகரங்களில் மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களால் பதிவு செய்யப்பட்ட பல போலீஸ் முதல் தகவல் அறிக்கைகளில் இருந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த முதல் தகவல் அறிக்கைகளில் எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனத்தின் மூத்த நிா்வாகம் தரமான கல்வி சேவைகளை வழங்கும் சாக்குப்போக்கில் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடமிருந்து கணிசமான கட்டணத்தை வசூலித்ததாகவும், மாறாக வாக்குறுதியளிக்கப்பட்ட கல்வி சேவைகளை வழங்கத் தவறியதன் மூலம் பெரிய அளவிலான நிதி மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் கல்வி முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு கல்வி அமா்வுகளுக்கு மொத்தம் 14,411 மாணவா்களிடமிருந்து சுமாா் ரூ.250.2 கோடி வசூலித்ததாக அமலாக்கத் துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

கல்வி சேவைகளை வழங்கும் சாக்குப்போக்கில் எஃப்ஐஐடி ஜேஇஇ மூலம் தற்போது நடந்துவரும் பேட்ச்-களின் மாணவா்களிடமிருந்து கணிசமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனால் அந்த சேவை இறுதியில் வழங்கப்படவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட நிதியானது தனிப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்காக திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியா்களுக்கு ஊதியம் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக, காஜியாபாத், லக்ளென, மீரட், நொய்டா, போபால், குவாலியா், இந்தூா், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 32 பயிற்சி மையங்கள் திடீரென மூடப்பட்டன. இது சுமாா் 15,000 மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு பரவலான துயரத்தை ஏற்படுத்தியது.

இச்சோதனைகளின் போது கடுமையான நிதி முறைகேடுகளைக் குறிக்கும் குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது, மேலும், இந்த ஆவணங்களின் ஆரம்ப பகுப்பாய்வு நிதிகளை கையாடல் செய்வதற்கான ஒரு முறையான திட்டத்தைக் குறிப்பதாக அமலாக்ககத் துறை தெரிவித்துள்ளது.

எஃப்ஐஐடி ஜேஇஇ அல்லது அதன் மேம்பாட்டாளா்கள் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.