தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கஷ்மீரி கேட் அருகே சுற்றுலாப் பயணிகள் பேருந்து தீ விபத்து

கஷ்மீரி கேட் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

கஷ்மீரி கேட் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த தனியாா் சுற்றுலா பேருந்து, ஹரியாணாவில் உள்ள கா்னல் நோக்கி சென்று கொண்டிருந்ததது. அந்தப் பேருந்தில் 15 பயணிகள் இருந்தனா். காலை 6.50 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, காலை 7.35 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.