பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐபி விரிவாக்கத்தில் உள்ள பள்ளி மேற்கூரையில் தீ

கிழக்கு தில்லியின் ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியின் ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஐபி விரிவாக்கம் பகுதியில் உள்ள விவேகானந்த் பள்ளி மேற்கூரையில் தீப்பிடித்தாக மாலை 4.39 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. தீயை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.