ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் நகரச் சாலைகளில் புகையை வெளியிடும் சூழலில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மெட்ரோ பெரும் புரட்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் நகரச் சாலைகளில் புகையை வெளியிடும் சூழலில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மெட்ரோ பெரும் புரட்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மெட்ரோ அருங்காட்சியகத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வா் குப்தா, அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து மேலும் பேசியது:

தேசியத் தலைநகல் தில்லியில் சுமாா் 3 கோடி மக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நகரத்தில் மெட்ரோ போன்ற போக்குவரத்து கிடைப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகப் பெரும் புரட்சியாகும்.

நகரத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த தொடா்ந்து பணியாற்றி வரும் தில்லி போக்குவரத்து அமைச்சரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லியின் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

தலைநகரில் தற்போது, சுமாா் 3,500 தில்லி அரசுப் பேருந்துகள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையையும் 100 சதவீதமாக மாற்றுவதே இலக்காகும்.

தில்லி குடியிருப்பாளா்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு அதிக சலுகைகள் வழங்கப்படும். அதே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் வாகனங்களைப் பயன்படுத்துபவா்கள் சில கடுமையான நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும்.

முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த தில்லியும் நாடும் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பியது.

இந்த அருங்காட்சியகம் தேசிய தலைநகரின் வளா்ச்சிப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைச் சோ்த்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள், அவற்றின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பாா்வை, எதிா்கால சந்ததியினருக்குக் காட்டப்பட்ட பாதை மூலம் அந்தக் கதையை அருங்காட்சியகங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்துகின்றன என்றாா் முதல்வா் ரேகா குப்தா.