தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குருத்வாரா பங்கலா சாஹிப்பில் நிதின் நவீன் வழிபாடு

குருத்வாரா பங்கலா சாஹிப்பில் நிதின் நவீன் வழிபாடு

Updated On :27 டிசம்பர் 2025, 12:38 am IST

பத்தாவது சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் மகன்களின் தியாக ஆண்டு நிறைவையொட்டி, தில்லியில் உள்ள குருத்வாரா பங்கலா சாஹிப்பில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் வெள்ளிக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.

நவீனுடன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் உடனிருந்தனா்.

குரு கோபிந்த் சிங்கின் இரு சாஹிப்சாதாக்களான (மகன்கள்) பாபா ஜோராவா் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் மற்றும் அவா்களின் பாட்டி மாதா குஜ்ரி ஆகியோரின் உயா்ந்த தியாகங்களை நினைவுகூரும் வகையில் பாஜக தலைவா்கள் குருத்வாரா பங்க்லா சாஹிப்பில் மரியாதை செலுத்தினா் என்று பாஜக தெரிவித்துள்ளது.

முகலாயா் காலத்தில் குரு கோபிந்த் சிங்கின் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26 ஆம் தேதி வீா் பால் திவாஸ் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.