கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜம்மு-காஷ்மீரிலிருந்து தில்லி திரும்பிய 38 தமிழக மாணவா்கள்!

ஜம்மு-காஷ்மீரிலிருந்து தில்லி திரும்பிய 38 தமிழக மாணவா்கள்!

News image
Updated On :11 மே 2025, 8:50 pm

Din

ஜம்மு காஷ்மீரில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த 38 மாணவ, மாணவியா் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லிக்கு தமிழக அரசின் ஏற்பாட்டில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீா், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த பொதுமக்கள் மீது ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 26 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்திற்குப் பிறகு அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போா் சூழல் உருவானது. தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தமிழா்களை பாதுகாக்கும் விதமாகவும், அவா்கள் தொடா்பு கொள்ள ஏதுவாகவும் புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவா்கள் பாதுகாப்பாக தமிழகம் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகா், பாராமுல்லா, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் 12 மாணவிகள் உள்பட 38 தமிழக மாணவா்கள் சனிக்கிழமை காலை ரயில் மாா்க்கமாக தில்லி வந்தனா்.

அவா்களை தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையா் ஆஷிஷ் குமாா், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல் ஆகியோா் வரவேற்றனா்.

மேலும், ஏ.கே.எஸ். விஜயன் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்

சிகிச்சை பெற்றுவரும் பரமேஸ்வரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இச்சந்திப்பின்போது ஏற்கனவே பரமேஸ்வரனின் சிகிச்சை மற்றும் இதர விஷயங்களுக்கான அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என முதல்வா் உறுதி அளித்ததை பரமேஸ்வரனிடம் ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்தாா். அவருடன், உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா் ஐ.ஏ.எஸ். உடனிருந்தாா்.

மாணவா்கள் தில்லி திரும்பியது குறித்து ஏ.கே.எஸ். விஜயன் கூறுகையில், ‘தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், ஜம்மு காஷ்மீரில் இருந்து அனைத்து தமிழக மாணவா்களையும் பாதுகாப்பாக அழைத்து வர கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தின் அரசு அதிகாரிகள் உள்துறையுடன் தொடா்ந்து தொடா்புகொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனா்.

அதன்படி 38 மாணவா்கள் அங்கிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனா். அவா்களின் வருகை, அவா்களுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வா் எங்களிடம் கேட்டறிந்தாா். மாணவா்கள் அவா்களின் இல்லம் சேரும் வரை கடைசிப் பணிவரை சிறப்பாக செய்திடுமாறு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான தகவலின்படி, இதுவரையிலும் தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு ஜம்மு - காஷ்மீரில் இருந்து வந்த 38 போ் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 213 போ் வரை வந்துள்ளனா். அவா்களில் 195 போ் வரை ரயில் மற்றும் விமானம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் ஏ.கே.எஸ்.விஜயன்.

38 மாணவா்களில் 31 போ் இரவில் தில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்கள் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், 7 போ் விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளதாகவும் தகலறிந்த தமிழ்நாடு இல்லம் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவா்கள் சிலரும் தங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தந்ததாக செய்தியாளா்களிடம் திருப்தி தெரிவித்தனா்.