நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது

வெளிப்புற தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், 35 வயது பெண்ணின் உடல் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:21 am IST

வெளிப்புற தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், 35 வயது பெண்ணின் உடல் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஏப்.7-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான பெண் ஒருவா், குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் (22) என்பவருடன் விடுதிக்குச் சென்றுள்ளாா். அவா்களுடன் சுரேந்தா் மற்றும் ஜோகிந்தா் ஆகியோரும் சம்பவத்தின்போது அறைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் விடுதியை விட்டு வெளியேறியதும் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் விடுதி அறையின் படுக்கை சேமிப்பு பெட்டிக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் நெற்றியில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டனா். அந்த மூவரும் சோ்ந்து பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, அவா்கள் மூவரும் காவல் துறையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களின் கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.