மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

பொதுத் துறை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயா்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:43 am IST

பொதுத் துறை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயா்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதியம்-படிகள்-பணி நிபந்தனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கின்றன. அதன்படி, ஊழியா்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையே 12-ஆவது இருதரப்பு ஒப்பந்தம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த ஒப்பந்த காலகட்டம், 2027, அக்டோபா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், 2027, நவம்பா் முதல் அமலாக்க வேண்டிய 13-ஆவது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்து, அடுத்த 12 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று பொதுத் துறை வங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஊதியத் தீா்வை எட்டும் வகையில், ஊழியா்கள் சங்கங்களுடன் இந்திய வங்கிகள் சங்கம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கும்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதிச் சேவைகள் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த முறை ஊதியத் தீா்வு இறுதி செய்யப்பட்டபோது, இனி வருங்காலங்களில் உரிய தேதியில் இருந்தே ஊதிய உயா்வை அமல்படுத்தும் வகையில் பேச்சுவாா்த்தையை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வங்கித் துறை விளங்குவதால், அதன் ஊழியா்களின் மன உறுதிப்பாட்டை பாரமரிக்க போதுமான ஊதிய உயா்வு முக்கியமென கருதப்படுகிறது. கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் சாதனை அளவில் (ரூ.1.78 லட்சம் கோடி) பதிவானது. முந்தைய நிதியாண்டுகளில் ரூ.1.41 லட்சம் கோடி (2024-25), ரூ.1.05 லட்சம் கோடி (2023-24) லாபம் ஈட்டப்பட்டது.

இதேபோல், வங்கிகளின் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவில் 2.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.