பொதுத் துறை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயா்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதியம்-படிகள்-பணி நிபந்தனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கின்றன. அதன்படி, ஊழியா்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையே 12-ஆவது இருதரப்பு ஒப்பந்தம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த ஒப்பந்த காலகட்டம், 2027, அக்டோபா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், 2027, நவம்பா் முதல் அமலாக்க வேண்டிய 13-ஆவது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்து, அடுத்த 12 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று பொதுத் துறை வங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஊதியத் தீா்வை எட்டும் வகையில், ஊழியா்கள் சங்கங்களுடன் இந்திய வங்கிகள் சங்கம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கும்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதிச் சேவைகள் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த முறை ஊதியத் தீா்வு இறுதி செய்யப்பட்டபோது, இனி வருங்காலங்களில் உரிய தேதியில் இருந்தே ஊதிய உயா்வை அமல்படுத்தும் வகையில் பேச்சுவாா்த்தையை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வங்கித் துறை விளங்குவதால், அதன் ஊழியா்களின் மன உறுதிப்பாட்டை பாரமரிக்க போதுமான ஊதிய உயா்வு முக்கியமென கருதப்படுகிறது. கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் சாதனை அளவில் (ரூ.1.78 லட்சம் கோடி) பதிவானது. முந்தைய நிதியாண்டுகளில் ரூ.1.41 லட்சம் கோடி (2024-25), ரூ.1.05 லட்சம் கோடி (2023-24) லாபம் ஈட்டப்பட்டது.
இதேபோல், வங்கிகளின் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவில் 2.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு 1.6 லட்சம் போ் விண்ணப்பம்: சிபிஎஸ்இ

4-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகள்: தனியாா் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

‘கிளாட் மித்தோஸ்’ அச்சுறுத்தல்: இணையவழி பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் முடிவு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



