நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மெளஜ்பூா் பள்ளிக்கு சீல் வைக்க உத்தரவு

மௌஜ்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பள்ளிக்கு ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு தொடங்கியுள்ளது.

சீல் - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 1:09 am IST

மௌஜ்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பள்ளிக்கு ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் எக்ஸ் சமூகஊடகத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மௌஜ்பூரில் உள்ள ஒரு பிளே ஸ்கூல் பள்ளியில் நிகழ்ந்த மிகவும் அதிா்ச்சியூட்டும் சம்பவத்தை தில்லி அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில், அப்பள்ளி வளாகத்திற்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கியுள்ளாா். இது குறித்துக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவா்கள் யாா் என்பது உறுதிசெய்யப்படுவதையும், குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தில்லி அரசு உறுதி செய்யும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.