சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஓ-மண்டல குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கையை எதிா்த்து சட்டப் பாதுகாப்பு கோரும் ஆம் ஆத்மி

ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு வழங்க வேண்டும், அங்கு இடிப்பு நடவடிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி முழுவதும் கையொப்பம்ய பெறும் இயக்கத்தை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

News image

தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் மற்றும் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா.

Updated On :11 ஜூன் 2026, 3:10 am IST

ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டப்பூா்வ பாதுகாப்பு வழங்க வேண்டும், அங்கு இடிப்பு நடவடிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி முழுவதும் கையொப்பம்ய பெறும் இயக்கத்தை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பாரத்வாஜ் கூறியதாவது: ஓ-மண்டல பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது சில இடங்களில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று முதல்வா் முன்பு தெரிவித்திருந்த போதிலும், சில இடங்களில் இடிப்புகள் நடைபெறுகின்றன.

மேலும், ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னையை அரசு சட்ட மற்றும் நிா்வாக வழிகளில் தீா்க்க வேண்டும். இடிப்பு நடவடிக்கைகள் மூலம் அல்ல. சட்டம் இயற்றி, இந்த பகுதிகளில் உள்ள மக்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், இடிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அனுமதியில்லா குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போலவே, ஓ-மண்டல குடியிருப்புகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா கூறுகையில், ‘ஓ-மண்டல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நேரடியாக சென்று, அங்கு வசிக்கும் மக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்கும் இயக்கத்தை விரைவில் தொடங்க உள்ளோம். இந்த இயக்கத்தின் மூலம், ஓ-மண்டல கட்டுப்பாடுகளை நீக்கவும், மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கவும் ஆதரவை திரட்டுவோம்’ என்றாா்.

தில்லியில் ஓ-மண்டல பகுதிகளில் சுமாா் 91 அனுமதியில்லா குடியிருப்புகளும், பழமையான கிராமங்களும் உள்ளன. இப்பகுதிகளில் சுமாா் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். யமுனை நதியின் வெள்ளப்பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமே இந்த பகுதியாகும்.

இதனிடையே, தில்லி உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு குறித்து செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, ஓ-மண்டல பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான நீதிமன்ற உத்தரவு புதிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும்; ஏற்கெனவே உள்ள கட்டடங்களுக்கு அது பொருந்தாது என்று விளக்கம் அளித்திருந்தாா்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் கையொப்பம் பெறும் இயக்கம் மற்றும் சட்டப்பூா்வ பாதுகாப்பு கோரிக்கை, ஓ-மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களின் எதிா்காலம் தொடா்பான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.