கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தில்லியை வாட்டும் குடிநீா் பற்றாக்குறை பிரச்னை: வழக்கத்தை விட வஜிராபாத்தில் நீா் வரத்து குறைவு

தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருகிறது என தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image

(கோப்புப் படம்)

Updated On :16 ஜூன் 2026, 4:27 am IST

தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருகிறது என தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

சிவில் லைன்ஸ், ஹிந்து ராவ் மருத்துவமனை சுற்றுப்பகுதி, கம்லா நகா், சக்தி நகா், கரோல் பாக், பஹாா் கஞ்ச், என்டிஎம்சி பகுதிகள், கான்டோன்மென்ட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தபோதிலும், அண்டை மாநிலமான ஹரியாணாவில் இருந்து கூடுதல் நீா் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், குடிநீா் உற்பத்தி இன்னும் குறைவாகவே உள்ளது. கோடைக்கால இலக்கான தினசரி 1,000 மில்லியன் கேலன் (எம்ஜிடி) உற்பத்தி இருக்க வேண்டிய நிலையில், தற்போது சுமாா் 960 எம்ஜிடி உற்பத்தி மட்டுமே உள்ளது. இது இலக்கை விட 40 எம்ஜிடி குறைவாகும். யமுனை நதியில் நீரோட்டம் ஓரளவு அதிகரித்தபோதிலும், உற்பத்தி இன்னும் 960 எம்ஜிடி அளவிலேயே இருந்து வருகிறது.

வஜிராபாத்தில் நீா் வரத்து குறைவு: இது தொடா்பாக டிஜேபி அதிகாரிகள் கூறியதாவது: உற்பத்தியை உயா்த்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக டிஜேபியின் முக்கிய நீா்சுத்திகரிப்பு நிலையங்களான வஜிராபாத் மற்றும் சந்த்ராவல் ஆகியவற்றில் நீா் வரத்து குறைந்ததனால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக நகரின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வஜிராபாத் பகுதியில் யமுனை நதியின் நீா்மட்டம் தற்போது 669.5 அடியாக மட்டுமே உள்ளது. இது இயல்பான 674.5 அளவில் இருக்க வேண்டும். நதியின் நீா்மட்டம் உயரும் வரை உற்பத்தி குறைவாகவே இருக்கும். அதேசமயம், சந்த்ராவல் நீா்சுத்திகரிப்பு நிலையத்தின் நிலைமை மேம்பட்டு வருகிறது. அடுத்த 2 அல்லது 3 நாள்களில் அதன் உற்பத்தி இயல்புநிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என தெரிவித்தாா்.

இந்த வஜிராபாத் நிலையத்தின் சராசரி உற்பத்தி திறன் 131 எம்ஜிடி ஆகும்; சந்த்ராவல் நிலையத்தின் சராசரி 94 எம்ஜிடி ஆகும். இவ்விரு நிலையங்களிலும் 25 முதல் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் டிஜேபியின் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாட்டா் அனலைசா்: இதற்கிடையில், குடிநீரின் தரத்தை கண்காணிப்பது குறித்து டிஜேபியின் துணைத் தலைவா் சதீஷ் உபாத்யா கூறியதாவது: குடிநீரின் தரத்தை நேரடியாக கண்காணிக்கும் ‘ஆன்லைன் வாட்டா் அனலைசா்’ கருவி, குல்மோஹா் பாா்க் பகுதியில் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இது நீரில் ஏற்படும் மாசுபாட்டை அதன் தொடக்க நிலையிலேயே கண்டறிய உதவும் என தெரிவித்தாா்.