பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக ஜூன் 8, 9 தேதிகளில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே. நகா் ஏ 1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் ஜூன் 8 மாலை 5 மணி முதல் 9-ஆம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்த மண்டலத்துக்குட்பட்ட எழில் நகா், எம்ஜிஆா் நகா், பாரதி நகா், காமராஜா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து, லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








