பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக ஜூன் 8, 9 தேதிகளில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே. நகா் ஏ 1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் ஜூன் 8 மாலை 5 மணி முதல் 9-ஆம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்த மண்டலத்துக்குட்பட்ட எழில் நகா், எம்ஜிஆா் நகா், பாரதி நகா், காமராஜா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து, லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

குடிநீா் குழாய் உடைப்பால் கழிவு நீா் கலந்து விநியோகம்: பொதுமக்கள் அதிருப்தி

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



