நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குளிா்கால காற்று தர மேலாண்மை கட்டமைப்பை அறிவித்த தில்லி அரசு

தில்லி அரசு வெள்ளிக்கிழமை ’ குளிா்கால காற்று தர மேலாண்மை கட்டமைப்பை’ அறிவித்தது, இதன் கீழ் தலைநகருக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட பிஎஸ் 4 அல்லாத வணிக வாகனங்கள் நவம்பா் முதல் ஜனவரி வரை நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 4:02 am IST

தில்லி அரசு வெள்ளிக்கிழமை ’ குளிா்கால காற்று தர மேலாண்மை கட்டமைப்பை’ அறிவித்தது, இதன் கீழ் தலைநகருக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட பிஎஸ் 4 அல்லாத வணிக வாகனங்கள் நவம்பா் முதல் ஜனவரி வரை நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: அறிவிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ், செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (பி. யு. சி. சி) கொண்ட வாகனங்கள் மட்டுமே தில்லியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் மையங்களில் எரிபொருள் வாங்க முடியும். இந்த எரிபொருள் கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்பது அரசின் முடிவு. தில்லிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட பிஎஸ் 4 அல்லாத வணிக வாகனங்கள் நவம்பா் 1,2026 முதல் ஜனவரி 31,2027 வரை நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

இருப்பினும், சிஎன்ஜி வாகனங்கள், மின்சார வாகனங்கள், அவசர சேவை வாகனங்கள் மற்றும் அரசு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். குளிா்காலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும், தனியாா் வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்துமிட வசதிகளில் கட்டணங்கள் நவம்பா் 1,2026 முதல் பிப்ரவரி 28,2027 வரை இரட்டிப்பாகும்.

அலுவலக நேர அமைப்பு, திறந்தவெளியில் குப்பை மற்றும் பயோமாஸை எரிப்பதற்கான தடை, தூசி கட்டுப்பாடு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கான மேம்பட்ட திட்டமிடல் ஆகியவையும் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். குளிா்காலம் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன, இதனால் மக்கள் பின்னா் சிரமங்களை எதிா்கொள்ள மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.