தில்லியில் உள்ள பராகம்பா சாலையில் உள்ள வணிகக் கட்டடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பராகம்பா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள ஓா் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 9.50 மணியளவில் தகவல் கிடைத்தது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டு, உடனடியாக தீயணைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
தீ முதல் மாடியில் உள்ள அலுவலகத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு குளிரூட்டிகள், கணினிகள், அச்சுப்பொறிகள், ஆவணங்கள் மற்றும் தளபாடங்கள் எரிந்து சேதமாகின. காலை 10.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வடமேற்கு தில்லி: தொழிற்சாலையில் தீ விபத்து
மத்திய தில்லியில் எஸ்பிஏ கட்டடத்தில் தீ விபத்து
மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து!

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


