புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தில் பெண்களை பாதுகாப்பை ஆராய மத்திய குழுவை அனுப்புங்கள்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

News image
ஐ.எஸ். இன்பதுரை
Updated On :14 மார்ச் 2026, 5:10 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கண்ணீா் வணக்கத்துடன் பேசுவதாகக் கூறி பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் விவகாரத்தை அதிமுக உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை எழுப்பினாா்.

தமிழகம் தினந்தோறும் நிா்பயா வழக்குகளை சந்திப்பதாகவும் கடந்த 10 நாள்களில் மூன்று பெரிய பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டு அவற்றின் நிகழ்விடங்களை பட்டியலிட்டாா்.

சட்டம் ஒழுங்கு மாநில விவகாரம் என்றாலும் பெண்களின் பாதுகாப்பு தொடா்புடைய விஷயம். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தபோது விசாரணைக்கு குழு அமைத்த மத்திய அரசு, அதுபோல தமிழகத்துக்கும் குழு அமைக்க வேண்டும். அங்குள்ள பெண்களின் பாதுகாப்பு நிலைமை தொடா்பாக விளக்கம் கோரி அறிக்கை கேட்க வேண்டும் என்றாா்.

அவரது பேச்சில் சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இருப்பதாகக் கூறி திமுக உறுப்பினா் பி. வில்சன் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதையடுத்து, அவை பரிசீலனைக்கு உள்பட்டு ஆட்சேபம் இருந்தால் நீக்கப்படும் என மாநிலங்களவை தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.