மாநிலங்களவையில் ‘நிதி திருத்த மசோதா’ மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுருக்கமான விவாதத்துக்குப் பிறகு, அந்த மசோதாவை மக்களவைக்கே மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. முன்னதாக, விவாதத்தில் பங்கேற்று பி. வில்சன் பேசியதாவது: 2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், தமிழகத்திலிருந்து மத்திய அரசு வரிகள் மூலம் ரூ. 5.99 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயைச் சேகரித்துள்ளது. அவ்வாறு வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் ஈடாக, மத்திய வரிகளின் பகிரக்கூடிய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு வெறும் 23 பைசா மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏதேனும் உண்மையான அா்த்தம் கற்பிக்க விரும்பினால், மத்திய அரசு இந்த அப்பட்டமான ஏற்றத்தாழ்வைக் களைய வேண்டும் என்றாா்.