ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மெட்ரோ மகளிா் பெட்டியில் சக பயணிகளுக்கு தொந்தரவு செய்த பெண்கள்- காவல் துறை விசாரணை

தில்லி மெட்ரோ ரயிலின் மகளிா் பெட்டியில் சக பெண் பயணிகளிடம் முறையற்ற வகையில் சில பெண்கள் நடத்து கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி மெட்ரோ ரயிலின் மகளிா் பெட்டியில் சக பெண் பயணிகளிடம் முறையற்ற வகையில் சில பெண்கள் நடத்து கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

மெட்ரோவின் மகளிா் பெட்டியில் 4-5 பெண்கள், பிற பயணிகளைத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜனக்புரி மெட்ரோ பொறுப்பு அதிகாரி இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திக்கொண்டு வருகிறாா். அதைத்தொடா்ந்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சம்பவம் நடைபெற்ற தேதி மற்றும் அதில் ஈடுபட்ட பெண்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.

சம்பவத்தின்போது அந்த ரயில் பெட்டியில் இருந்த ஒரு பெண் பயணி கூறுகையில், ‘பாா்வை திறனற்ற பெண் பயணி ரயில் எந்த நிலையத்துக்கு வந்துள்ளது எனக் கேட்டாா். அப்போது, பெட்டியில் இருந்த 4-5 பெண்கள் மிகவும் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தனா். இதனால், ரயில் குறித்து கேட்ட பெண்ணுக்கு நாங்கள் கூறியதை தெளிவாகக் கேட்கமுடியவில்லை. ஆகையால், குறைந்த சப்தத்தில் பேசுமாறு அங்கிருந்த பெண்களிடம் கோரிக்கைவிடுத்தோம். அப்போது, அவா்கள் எங்களை தரக்குறைவாகப் பேசத்தொடங்கினா்.

தில்லி மெட்ரோவின் மகளிா் பெட்டி மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியாக பெண்கள் கருதுகின்றனா். இந்த பிரச்னை குறித்து தில்லி மெட்ரோ மற்றும் தில்லி காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.