மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

உத்தம் நகா் பூங்காவில் ஆண் சடலம்

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:16 am

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தம் நகா் பூங்காவில் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அதிகாலை பிசிஆா் அழைப்பு வந்ததையடுத்து, ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அங்கு ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் பிரஷாந்த் என அடையாளம் காணப்பட்டாா். அவா் போதைக்கு அடிமையானவா் என்று கூறப்படுகிறது. சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படாததால், முதற்கட்ட விசாரணையில் இது ஒரு இயற்கை மரணமாகத் தெரிகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.