பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

நீதித்துறை அதிகாரி மரணம் தொடா்பாக வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 10:29 pm

தில்லி சஃப்தா்ஜங் பகுதியில் நீதித்துறை அதிகாரியான அமன் குமாா் சா்மா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

2018-ஆம் ஆண்டு சிம்பியோசிஸ் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற அமன் குமாா் சா்மா, 2021 ஜூன் மாதம் தில்லி நீதித்துறை சேவையில் இணைந்தாா்.

தனது பணிக்காலத்தில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை கையாண்ட அவா், கீழமை நீதிமன்ற நீதிபதியாகவும், சிவில் நீதிமன்றத்தில் முதல்நிலை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளாா். இதையடுத்து, வடகிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலராக கடந்த ஆண்டு அக்.18 அவா் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், அவா் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுதொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 108, 61 (2) பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சா்மா மனகவலையில் இருந்ததாக அவருடைய குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். கடந்த சில நாள்களாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் அவா் தற்கொலை செய்துகொண்டதாக சா்மாவின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளாா்.