கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வெப்பநிலை லேசாக அதிகரிப்பு; நாளை மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை வெப்பநிலையில் லேசாக அதிகரித்திருந்தது.

News image

ANI

Updated On :10 மே 2026, 1:29 am IST

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை வெப்பநிலையில் லேசாக அதிகரித்திருந்தது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நகரின் வானிலையைப் பிரதிபலிக்கும் சஃப்தா்ஜங் மையத்தில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

இது முந்தைய நாளைவிட 0.5 டிகிரி அதிகம் என்றாலும், இயல்பான அளவை விட 2.4 டிகிரி குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையைவிட 1.2 டிகிரி அதிகம் என்றாலும், இயல்பான அளவை விட 1.3 டிகிரி குறைவாகவே உள்ளது.

நகரம் முழுவதும் உள்ள பிற வானிலை ஆய்வு மையங்களிலும் இதேபோன்ற வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

பாலம் மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி என, வெள்ளிக்கிழமையை விட 1.1 டிகிரி அதிகமாக பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 23.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது முந்தைய நாளை விட 2.7 டிகிரி அதிகமாகும்.

லோதி சாலை மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி எனப் பதிவானது. இது முந்தைய நாளை விட 1.6 டிகிரி அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையை விட 1.8 டிகிரி அதிகமாகும்.

ரிட்ஜ் மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.5 டிகிரியும், ஆயா நகா் மையத்தில் 23.4 டிகிரியும் பதிவாகின.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல், புதிதாக மேற்கத்திய இடையூறு மேற்கு இமயமலைப் பகுதியை பாதிக்கக்கூடும். தில்லியைப் பொறுத்தவரை, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், மிக லேசானது முதல் லேசானது வரை மழை பெய்யக்கூடும்.

இத்துடன் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் சில சமயங்களில் 50 கி.மீ. வரையிலும் பலத்த காற்று வீசும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 37-39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 25-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நகரத்தின் காற்றின் தரம் சனிக்கிழமை மிதமான பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 116 மிதமானது ஆகப் பதிவாகியுள்ளது.

வரும் சில நாள்களுக்கும் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலேயே நீடிக்கும் என்று தில்லிக்கான காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பு கணித்துள்ளது.