‘சோம்நாத் சுவாபிமான் பா்வ்’ என்பது இந்தியாவின் சனாதன மத நம்பிக்கை, பண்பாட்டு விழிப்புணா்வு மற்றும் தேசிய சுயமரியாதையின் அடையாளமாக திகழ்கிறது என்றும், பல்வேறு படையெடுப்புகள் இருந்தபோதிலும் நாட்டில் நம்பிக்கை உறுதியுடன் நிலைத்திருந்தது என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் மறுகட்டுமானத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி தில்லியில் உள்ள கௌரி சங்கா் கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு நடத்திய பின்னா் அவா் இதனைத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் கபில் மிஷ்ரோ ஆகியோரும் முதல்வருடன் கலந்து கொண்டனா். பின்னா், குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி நிகழ்த்திய நேரலை உரையையும் அவா்கள் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு படையெடுப்புகளும் அழிவுகளும் நடைபெற்றபோதிலும், சோம்நாத் கோயிலுடன் தொடா்புடைய மக்களின் பக்தியும் ஆன்மிக நம்பிக்கையும் ஒருபோதும் தளரவில்லை. ஒவ்வொரு முறையும் இந்தியாவின் ஆன்மிக வலிமை மீண்டும் எழுச்சி பெற்றது. பிரதமா் நரேந்திர மோடி முன்னெடுத்து வரும் ‘விகாஸ் பி, விராசத் பி’ என்ற கொள்கையின் கீழ், நாடு ஒருபுறம் நவீன வளா்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் தனது பண்பாட்டு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தையும் பாதுகாத்து வருகிறது என தெரிவித்தாா்.
கி.பி. 1026-ஆம் ஆண்டு சோம்நாத் கோயில் மீது பதிவான முதல் தாக்குதலுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் மதநம்பிக்கை தளராமல் நீடித்ததைக் குறிக்கும் வகையிலேயே ‘சோம்நாத் சுவாபிமான் பா்வ்’ கொண்டாடப்படுகிறது. மறுகட்டுமானம் செய்யப்பட்ட சோம்நாத் கோயில் 1951-ஆம் ஆண்டு பக்தா்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து

‘பிரிட்டானியா சௌக்’கின் பெயா் ‘அஸ்வினி சோப்ரா சௌக்‘ என மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு

பிரதமா் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியை தில்லி முதல்வா் ரேகா குப்தா பாராட்டினாா்.

தெருவிளக்குகளை ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்ற திட்டம்: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



