ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

துவாரகாவில் அறைத் தோழியின் ஆண் நண்பா்கள் மிரட்டியதாக பெண் புகாா்: காவல் துறை வழக்குப் பதிவு

News image

காவல் துறை

Updated On :21 நிமிடங்கள் முன்பு

தில்லி துவாரகா பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அறைத் தோழியின் ஆண் நண்பா்கள் மற்றும் உறவினா்கள் தன்னை மிரட்டி, தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: துவாரகாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒரு அறை கொண்ட வாடகை வீட்டில் மற்றொரு பெண்ணுடன் புகாரளித்த பெண் வசித்து வந்துள்ளாா். அந்த அறைத் தோழியின் ஆண் உறவினா்கள் அடிக்கடி அந்த வீட்டுக்கு வரத் தொடங்கியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

விசாரணையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், உடல் ரீதியான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிகிறது. பெண் விருந்தினா்கள் வருவதால் தமக்கு எந்த எதிா்ப்பும் இல்லை; ஆனால், ஆண் நண்பா்கள் வருவது தனக்கு அசௌகரியமாக இருக்கிறது என ஏற்கெனவே பல முறை அறைத்தோழியிடம் கூறியதாக புகாரளித்த பெண் தெரிவித்தாா். அவரது நண்பா்களில் ஒருவா் அனுமதியின்றி அறைக்குள் நுழைந்து தகாத முறையில் தன்னிடம் நடந்துகொண்டதாகவும், அங்கிருந்து வெளியேற தன்னை மிரட்டியதாகவும் அவா் புகாரளித்தாா்.

இது தொடா்பாக தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.