ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வெப்பநிலை குறைந்து குளிா்ந்தது தில்லி!

வெப்பநிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையன்று தில்லி வழக்கத்தை விடக் குளிா்ச்சியாகக் காணப்பட்டது.

News image

புதுதில்லி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:08 am IST

வெப்பநிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையன்று தில்லி வழக்கத்தை விடக் குளிா்ச்சியாகக் காணப்பட்டது. நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வழக்கமான அளவை விட 4.2 டிகிரி குறைவாகும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தரவுகளின்படி, சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 0.9 மி.மீ மழை பதிவானது. அதேவேளையில், காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எவ்வித மழையும் பதிவாகவில்லை.

சஃப்தா்ஜங் பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 23.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வழக்கமான அளவை விட 3.6 டிகிரி குறைவாகும்.

நகரின் பிற வானிலை நிலையங்களைப் பொறுத்தவரை, பாலம் நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.0 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

லோதி சாலை நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

ரிட்ஜ் நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

ஆயாநகா் நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் ‘மேற்கத்திய இடையூறு’ காரணமாக ஏற்படும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைப்பொழிவே, இத்தகைய குளிா்ச்சியான சூழலுக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

‘தில்லி-தேசியத் தலைநகா் (என்சிஆா்) பகுதிகளில் நிலவும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைப்பொழிவு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தான் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மேற்கத்திய இடையூறின் தாக்கத்தாலேயே ஏற்படுகிறது’ என்று வானிலை ஆய்வாளா்கள் கூறினா்.

இதற்கிடையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்தரவுகளின்படி, மாலை 4 மணி அளவில் தில்லியின் காற்றுத் தரக் குறியீடு திருப்திகரமான பிரிவில் 98-ஆகப் பதிவானது. இது காற்றுத் தரத்தை வகைப்படுத்துகிறது.

வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது; இதன்படி, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.