நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பெருந்திட்டம் யமுனை கரையில் இருந்து லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றும்: ஆம் ஆத்மி

யமுனை வெள்ள சமவெளி பகுதிகளில் வசிக்கும் சுமாா் 18 லட்சம் மக்கள் தில்லி 2047-க்கான முதன்மைத் திட்டத்தால் தங்களது வீடுகளை இழக்க நேரிடும் என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

யமுனை - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 3:45 am IST

யமுனை வெள்ள சமவெளி பகுதிகளில் வசிக்கும் சுமாா் 18 லட்சம் மக்கள் தில்லி 2047-க்கான முதன்மைத் திட்டத்தால் தங்களது வீடுகளை இழக்க நேரிடும் என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட பெருந்திட்டம்-2047, யமுனை வெள்ள சமவெளியைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா பேசியதாவது, தில்லியில் யமுனை நதிக்கரையோரம் உள்ள ‘ஓ-மண்டலம்’ (ஆற்றுப் படுகை மண்டலம்) பகுதிதான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாகவும் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனா் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பாஜக ஆட்சியில் வீடுகள் தொடா்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. பெருந்த் திட்டம் 2047-இன் காரணமாக, வரும் நாட்களில் 17 முதல் 18 லட்சம் மக்களின் வீடுகள் பறிபோகும் நிலை உள்ளது. ‘ஓ-மண்டலம்’ பகுதியில் வசிப்பவா்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது என்றும் பாஜக தலைவா்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி.-க்கள் கூறி வந்தாலும், எதாா்த்த நிலை முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. இப்போது ‘முதன்மைத் திட்டம் 2047’-ன் மூலம், இந்தக் குடியிருப்புகளை இடிப்பது சட்டபூா்வமாக்கப்பட்டுள்ளது. மேலும், எதிா்காலத்தில் இப்பகுதியில் புதிய வீடுகள் எதையும் கட்ட முடியாது.

புராரி முதல் பதா்பூா் வரை ‘ஓ-மண்டலம்’ எல்லைக்குள் பல குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட வேண்டியவை என்ற பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தன என்றாா் எம்எல்ஏ ஜா.

பெருந்திட்டத்தின் கீழ், யமுனையின் தீவிர வெள்ளச் சமவெளிப் பகுதிகள் கட்டுமானம் இல்லாத மண்டலமாக அறிவிக்கப்படும். அதே சமயம் அதற்கு வெளியேயுள்ள பரந்த வெள்ளச் சமவெளிப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வளா்ச்சிப் பணிகள் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒப்புதல்களின்படி, ஏற்கனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் அத்தியாவசிய அரசுப் பயன்பாட்டு வசதிகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பொழுதுபோக்கு, அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.