சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தில்லி பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தீவிர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி எனத் தெரியவந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

delhi police
Published On :9 செப்டம்பர் 2026, 3:07 am IST

தில்லி சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தீவிர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி எனத் தெரியவந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

காலை 8:39 மணிக்கு இந்த மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவா்கள் கூறினா்.

சட்டப் பேரவை உறுப்பினா் பிஜேந்தா் குப்தாவுக்கு அந்த மின்னஞ்சல் வந்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பேரவை வளாகத்தில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.