வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதிய வக்ஃப் வாரியம் அமைக்க உத்தரவிட கோரி மனு: தில்லி அரசு, மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லி வக்ஃப் வாரியத்தை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும் தில்லி அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

தில்லி வக்ஃப் வாரியத்தை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும் தில்லி அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக மனுதாரா் முகம்மது ஷாஹித் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்து நீதிபதி அனீஷ் தயாள் பிறப்பித்த உத்தரவில், திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின்படி வாரியத்தை அமைப்பதற்கான சட்டபூா்வ நடைமுறைகளை உடனடியாக நிறைவு செய்ய மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தில்லி அரசும் மத்திய அரசும் அவற்றின் நிலைப்பாட்டை நான்கு வாரங்களுக்குள் தெளிவுபடுத்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அடுத்தகட்ட விசாரணை டிச.10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டாா்.

பின்னணி‘ முந்தைய தில்லி வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் 2023, ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அதன் பிறகு புதிய வாரியம் அமைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் 2024, ஜனவரி மாதம் ஒரு நிா்வாகியை தில்லி அரசு நியமித்தது. ஆனாலும், சட்டபூா்வமாக வாரியம் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று மனுதாரா் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியம் முறைப்படி அமைக்கப்படாததால், தலைநகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் தவறான பயன்பாட்டுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வக்ஃப் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிவாசல்கள், கல்லறைகள் (கபா்ஸ்தான்), கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை பராமரிப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவதாகுவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.