உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழும் இருளை விரட்டியடிப்போம்! மு.க. ஸ்டாலின் உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழும் இருளை விரட்டியடிப்போம்! மு.க. ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலையில் தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றமில்லை!சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்!தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி

நாகர்கோவில், பிப். 25: நாகர்கோவில் புத்தேரியில் ரூ. 21.40 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.   நாகர்கோவில்- புத்தேரி இடையே போக்குவரத்த

Updated On :20 செப்டம்பர் 2012, 4:01 pm IST

நாகர்கோவில், பிப். 25: நாகர்கோவில் புத்தேரியில் ரூ. 21.40 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

  நாகர்கோவில்- புத்தேரி இடையே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்கவும், புத்தேரி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

  இதையடுத்து, ரயில்வே மேம்பாலம அமைக்க அரசு அனுமதி அளித்தது. இந்த மேம்பால கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  புத்தேரி ரயில்வே கேட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிகளை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியதாவது:

  இந்த மேம்பாலப் பணிக்கு அண்மையில் நாகர்கோவிலுக்கு வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார்.

  ரூ. 21.40 கோடியில் இந்த பணி நடைபெறவுள்ளது. ஓராண்டுக்குள் இந்த கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்.

  சுனாமியின்போது மேலமணக்குடி- கீழமணக்குடி இடையே அமைக்கப்பட்டிருந்த இணைப்பு பாலம் முழுவதும் சேதமடைந்தது. இந்த பாலத்தை கட்டும்பணி வரும் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ளது என்றார் அமைச்சர்.

  நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அ. ராஜன், எஸ். ஜெயபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் கோலம்மாள், புத்தேரி ஊராட்சித் தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துசெல்வி, ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜ், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஹரிராஜ், கண்காணிப்புப் பொறியாளர் ஸ்ரீரங்கன், கோட்டப் பொறியாளர் அனந்தசயனம், கண்காணிப்புப் பொறியாளர் ராஜாராமன், கோட்டப் பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.