ஆறுமுகனேரி, ஜன. 8: ஆறுமுகனேரி பேரூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் சா.பொன்ராஜ் தலைமை வகித்தார்.நிர்வாக அதிகாரி வெ.முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், மனித வளம் மனிதக் கழிவுகளை அகற்றுவதை தடை செய்வது மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.
துணைத் தலைவர் காந்தி என்ற சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் எஸ்.லட்சுமணன், ஜெய்சங்கர், கஸ்தூரிபாய், ர.செல்வி, மகராஜன், புனிதா பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி உறுப்பினர் சிவபெருமாள் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.