6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலவச வேட்டி, சேலை வழங்குவதில் கெடுபிடி

களியக்காவிளை, ஜன. 8:குளப்புறம் கிராம அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதில் அங்கிருந்த பணியாளர்கள் அதிகக் கெடுபிடி காட்டியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.  செம்மான்விளைய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

களியக்காவிளை, ஜன. 8:குளப்புறம் கிராம அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதில் அங்கிருந்த பணியாளர்கள் அதிகக் கெடுபிடி காட்டியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

 செம்மான்விளையில் உள்ள இக் கிராம அலுவலகத்தில், சனிக்கிழமை அதங்கோடு கேவிடிசிஎம்எஸ் நியாயவிலைக் கடைக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி நடைபெற்றது.

  இங்கு அதங்கோடு, கொக்குடிவிளை, மடிச்சல் உள்ளிட்ட 5 கி.மீ. தொலைவிலுள்ள மக்கள் இலவச வேட்டி, சேலைகள் வாங்க வந்திருந்தனர்.   

  பள்ளி விடுமுறை நாளென்பதால், 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் உறவினர்களுடன் வந்தனர்.

சிறுவர்களுக்கு கையெழுத்திடத் தெரியாது எனக் கூறி அவர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்க அங்கிருந்த பணியாளர்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து, இச் சிறுவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கும், சிறுவர்கள் கொண்டுவந்த குடும்ப அட்டைகளுக்கும் என இரு கையெழுத்துகள் போட்டு இலவச வேட்டி, சேலைகளை வாங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.