முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரி மாவட்ட வேளாண் சேவை மையங்களில் விவசாய உபகரணங்கள் பெறும் வசதி

நாகர்கோவில், ஜன.8:கூட்டுறவு சங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் சேவை மையங்களில் விவசாயிகள் வேளாண் உபகரணங்களைப் பெற்று பயன்பெறலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் ஆ.க. சிவமலர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

நாகர்கோவில், ஜன.8:கூட்டுறவு சங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் சேவை மையங்களில் விவசாயிகள் வேளாண் உபகரணங்களைப் பெற்று பயன்பெறலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் ஆ.க. சிவமலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 76 வேளாண் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களில் உழவு இயந்திரம், நெல் நாற்று நடும் இயந்திரம், சிறிய இழுப்பான், களை எடுக்கும் இயந்திரம், கைத்தெளிப்பான்கள், தென்னைமரம் ஏறும் கருவி, தேங்காய் உரிக்கும் கருவி மற்றும் விசைத்தெளிப்பான்கள், மண் மாதிரி எடுப்பதற்கு தேவையான ஆகர் கருவி ஆகியவையும், அந்தந்த மண்வாகு, சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து இதர வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கவும், கடன் மூலம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண்மை பொறியியல் துறையுடன் இணைந்து விவசாயத்துக்குத் தேவையான மினி டிராக்டர், பவர் டிரில்லர், விசைத் தெளிப்பான், நெல் நாற்று நடும் இயந்திரம் போன்ற வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வேளாண் சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி அரசின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சிவமலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.