சாலை பாதுகாப்பு வார விழா

கோவில்பட்டி, ஜன. 8:   கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா, கே.ஆர். கல்வி நிறுவனங்களில் இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.   தூத்துக்குடி வட்டா
Updated on
1 min read

கோவில்பட்டி, ஜன. 8:   கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா, கே.ஆர். கல்வி நிறுவனங்களில் இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

  தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல், கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார், காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நம்பிராஜன் ஆகியோர் பேசினர்.

  கட்டுரைப் போட்டியில் மாணவர் அரவிந்த், மாணவி உமா, மாணவர் பீர்முகமது ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். பேச்சுப் போட்டியில் ஆனந்த் முதல் பரிசும், சரண்யாதேவி 2-ம் பரிசும், செல்லத்துரை 3-ம் பரிசும் பெற்றனர்.

  விழாவில், 54 ஆண்டுகளாக விபத்தின்றி மோட்டார் வாகனம் ஓட்டிய 86 வயது முதியவர் அபுபக்கருக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது.

  முன்னதாக கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் வரவேற்றார். ஆட்டோ மொபைல் துறைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com