சுயதொழில் பயிற்சி:ஜன. 16 கடைசி தேதி

திருநெல்வேலி,ஜன.8:   திருநெல்வேலி மாவட்ட நேருயுவ கேந்திரா மூலம் இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள சுயதொழில் பயிற்சிக்கு இம் மாதம் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மதிவா
Updated on
1 min read

திருநெல்வேலி,ஜன.8:   திருநெல்வேலி மாவட்ட நேருயுவ கேந்திரா மூலம் இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள சுயதொழில் பயிற்சிக்கு இம் மாதம் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: நேருயுவ கேந்திரா மூலமாக 20 வயதுமுதல் 35 வயதுவரை உள்ள ஆண், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் புதிய பயிற்சி அளிக்க உள்ளோம். இப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

 இப் பயிற்சி முகாம் 30 நாள்கள் 3 பிரிவுகளாக நடத்தப்படும். முதல் 7 நாள்கள் வாழ்க்கை திறன் கல்வி, அடுத்த 7 நாள்கள் ஆளுமை, தலைமைப் பயிற்சி முகாம், அடுத்த 16 நாள்கள் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் பயிற்சி முகாம் ஆகியவை நடைபெறும்.

 பயிற்சி நாள்களில் உணவு, தங்குமிடம் வழங்கப்படும். இதில் பயிற்சிப் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரும்புகிறவர்கள் இம் மாதம் 16-க்குள், முழு விலாசத்துடன் கூடிய சுய தகவல்களை விண்ணப்பம் மூலம் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர், நேருயுவ கேந்திரா ஒட்டுநர் குடியிருப்பு, என்.ஜி.ஒ. அ. காலனி, திருநெல்வேலி - 7 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு 0462 - 2552803 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் மதிவாணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com