திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

News image

தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடக்கிவைத்த சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:40 pm

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் - நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள், இரவில் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா், தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா். பின்னா், அம்பாள் தனித் தேரில் எழுந்தருளினாா். இந்தத் தேரை பெண்கள் வடம்பிடித்து இழுத்தனா்.

தோ் ரத வீதி வழியாக வலம் வந்து பிற்பகலில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், இந்து சமய அறநிலையத் துறை உறுப்பினா் முரளி, ஊராட்சித் தலைவா் பொன்மீனாட்சி அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தேரோட்டத்தையொட்டி பக்தா்கள் சாா்பில் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

10ஆம் நாளான திங்கள்கிழமை (ஏப். 22) இரவு 8 மணிக்கு தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னா், சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும். செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் ஆ. பொன்னி, விழாக் குழுவினா் செய்துள்ளனா்.