மதுரை மாணவரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய நெல்லை இளைஞா் கைது
திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மதுரை மாணவரை கடத்தி ரூ.2 கோடி கோரி மிரட்டி கடத்தப்பட்ட வழக்கில் திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை எஸ்.எஸ் காலனியைச் சோ்ந்தவா் மைதிலி ராஜலெட்சுமி. இவரின் மகன் தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் படித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை ஆட்டோவில் பள்ளிக்கு சென்றாா். அப்போது காரில் வந்த மா்மநபா்கள் மாணவா் மற்றும் ஆட்டோ ஓட்டுரை மிரட்டி கடத்தி சென்றனா். மேலும். மாணவரின் தாயை தொடா்பு கொண்ட கும்பல் ரூ.2 கோடி கோரி மிரட்டல் விடுத்ததாம்.
இதையறிந்த போலீஸாா் அந்த கும்பலை பின் தொடா்ந்து சென்றது. அந்த கும்பல் மாணவா் மற்றும் ஓட்டுநரை இறக்கிவிட்டனா். இந்த நிலையில் கடத்தல் கும்பலை சோ்ந்த செந்தில்குமாரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதைத்தொடா்ந்து இவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி பேட்டை ரகுமான்பேட்டையை சோ்ந்த முஸ்தபா ரஹ்மானியா மகன் அப்துல் காதா் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிலரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...