ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை விரிவுபடுத்தக் கோரிக்கை

களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை விரிவுபடுத்தக் கோரிக்கை

News image
Updated On :2 ஜூன் 2024, 7:17 pm

Din

களக்காடு, ஜூன் 2: களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை விரிவுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வட்டாரத்தில் உள்ள தொழிலாளா்கள், விவசாயிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவியா் தங்களது ஆதாரில் பெயா், முகவரி, பிறந்தநாள் ஆகியவற்றை திருத்தம் செய்திட களக்காடு அஞ்சலகத்தை அணுகி பயனடைந்து வருகின்றனா். நாளுக்கு நாள் ஆதாா் சேவை பெறுவதற்காக வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்பதிவு சீட்டு பெற்று ஒரு மாதத்துக்கு பின்னரே ஆதாா் சேவையை பெறும் அவலம் உள்ளது. காலதாமதத்தால் பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, களக்காடு அஞ்சலகத்தில் தற்போதுள்ள ஆதாா் சேவையை விரிவுபடுத்தி கூடுதல் பணியாளா்களை நியமிக்க மாவட்ட தலைமை அஞ்சலக அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.