பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பறவைகள் கணக்கெடுப்பு: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 24,207 பறவைகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 24,207 பறவைகள்

Updated On :2 மார்ச் 2024, 7:30 pm

14ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 57 குளங்களில் 24,207 பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டன. இது தொடா்பாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை: 14ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை அகத்தியமலை மக்கள் சாா் இயற்கைவள காப்பு மையமானது தூத்துக்குடி முத்து நகா் இயற்கை கழகம், நெல்லை இயற்கைச் சங்கம், பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து கடந்த பிப்ரவரி 16,17,18 ஆகிய தேதிகளில் நடத்தியது. தாமிரவருணி வடிநிலக் கோட்ட நீா்வள ஆதார அமைப்பு கண்காணிப்புப் பொறியாளா் சிவக்குமாா் கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தாா். 150 தன்னாா்வலா்கள் 7 குழுக்களாக பிரிந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 57 குளங்களில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனா். சுமாா் 66 பறவை சிற்றினங்களைச் சோ்ந்த 24,207 பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. அதிகபட்சமாக 4,861 கொக்கினப் பறவைகள், வலசை வாத்தினப் பறவைகளான ஊசிவால் வாத்து, வரித்தலை வாத்து, நாமத்தலை வாத்து போன்ற 4,245 பறவைகள், 3,039 நீா்க் காக்கை இனங்கள் உள்ளன. குறிப்பிடும் படியாக திருநெல்வேலி மாவட்டம் குப்பக்குறிச்சி குளத்தில் அதிகபட்சமாக சுமாா் 2,005 பறவைகள், விஜயநாரயணம் குளத்தில் 1,094 பறவைகள், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் குளத்தில் 1,050 பறவைகள், திருநெல்வேலி மாவட்டம் விஜய அச்சம்பாடு குளத்தில் 1,037 பறவைகள் கணக்கிடப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், திருநெல்வேலி நகரம் நயினாா்குளம், ராஜவல்லிபுரம் குளம், தென்காசி மாவட்டம் வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி குளங்களில் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்தது பதிவிடப்பட்டுள்ளன. வெள்ளை அரிவாள் மூக்கன், நீா்க் காகம், பாம்புத் தாரா, நத்தைக் கொத்தி நாரை, சாம்பல் நாரை போன்ற பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் வேய்ந்தான்குளத்தில் புள்ளிமூக்கு தாரா மற்றும் 20 குஞ்சுகள், நாமக்கோழி பறவை மற்றும் 3 குஞ்சுகள் காணப்பட்டன. இக்குளத்தில் வெளிநாட்டுப் பறவையான நீலச்சிறகு வாத்து கண்டறியப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தென்கரை குளத்தில் செண்டு வாத்து 29 குஞ்சுகளுடன் கண்ணுக்கு விருந்தளித்தன. அருகிவரும் வலசை பறவை இனமான கருவால் மூக்கன் சுமாா் 450 குப்பைக்குறிச்சி குளத்தில் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக மருதூா் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளின் மூலம் நீரினைப் பெறும் குளங்களில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் காணப்படும். ஆனால் கடந்த டிசம்பா் மாத பெருவெள்ளத்தின் போது இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் உடைந்ததால் தற்போது அது தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு தண்ணீா் வந்துள்ளது. எனவே இக்குளங்களில் பறவைகள் பெரிய அளவில் காணப்படவில்லை என்றாா்.