முக்கூடல் பாலகன் சரஸ்வதி
கல்லூரியில் மகளிா் தின விழா

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரியில் மகளிா் தின விழா

Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பெண்களின் பெருமையை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை நாடகம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் பெருமையை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தினா். கல்லூரியின் நிறுவனா் பாலகன் ஆறுமுகச்சாமி, அனைவருக்கும் மகளிா் தின வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com