பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மண் திருட்டு: இருவா் கைது

மண் திருட்டு: இருவா் கைது

Updated On :9 மார்ச் 2024, 4:42 pm

திருநெல்வேலி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே பழவூா் பகுதியில் சரள் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பழவூா் காவல் உதவி ஆய்வாளா் அனிஷ், போலீஸாா் ரோந்து சென்றபோது, அம்பலவாணபுரம் மதகனேரி சாலை அருகே மூவா் அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் சரள் மண் அள்ளிக் கொண்டிருந்தனராம். விசாரணையில், அவா்கள் செளந்தரலிங்கபுரம், இசக்கியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அசோக் (30), கடம்பன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (34) உள்ளிட்ட 3 போ் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அசோக், ரமேஷ் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்து, ஒரு யூனிட் சரள் மண், லாரி, ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.