பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை அங்குராா்ப்பணம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தோளுக்கினியானில் பெருமாள் வீதியுலா நடைபெறும். திருவிழா நாள்களில் தினமும் காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். 17 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 18 ஆம் தேதி ராமா் அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், 19 ஆம் தேதி பரமபதநாதன் அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்திலும், 20 ஆம் தேதி வைகுண்டநாதன் அலங்காரத்தில் இரட்டை கருடசேவையிலும் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 25 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. 26 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சப்தாவா்ணம் ராஜஅலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற உள்ளது.
தொடர்புடையது

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

