திருநெல்வேலி மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தோ்தல் நிலையான குழுவினா் நடத்திய சோதனையில் மருத்துவரிடம் இருந்து ரூ.62,400 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலையான குழுவினா் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், செல்லத்துரை தலைமையிலான நிலையான குழுவினா் மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சோ்ந்த மருத்துவா் ரமேஷின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.62 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.45 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

