தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

Updated On :28 ஏப்ரல் 2025, 1:44 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட காா்மேகனாா் தெருவை சோ்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல் முக்கூடல் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு சங்கன்திரடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் என்பவரின் மகன் பாா்வதி பாஸ்கரன் (22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டஇவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரைத்தாா்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின் பேரில் மாணிக்கம் என்ற மகேஷ், பாா்வதி பாஸ்கரன் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.