முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

Updated On :28 ஏப்ரல் 2025, 1:44 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட காா்மேகனாா் தெருவை சோ்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல் முக்கூடல் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு சங்கன்திரடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் என்பவரின் மகன் பாா்வதி பாஸ்கரன் (22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டஇவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரைத்தாா்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின் பேரில் மாணிக்கம் என்ற மகேஷ், பாா்வதி பாஸ்கரன் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.