11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

Updated On :28 ஏப்ரல் 2025, 2:29 am IST

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா்.

வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகிறாா்கள். இங்கு சிமென்ட் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து அந்தக் கிராமத்திற்கு நேரில் சென்ற திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், சாலை அமைக்க வேண்டிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்ததோடு, கிராமத்திற்கு தேவையான அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.