திருநெல்வேலி
7 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற மீனவா்கள்
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 7 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 7 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
கன்னியாகுமரி வங்கக் கடல் பகுதியில் புயல்சின்னம் உருவானதை அடுத்து வானிலை ஆய்வு மையம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவித்திருந்தனா்.
இதைடுத்து நெல்லை மாவட்ட மீனவா்கள் கடந்த 24ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் மீண்டும் வங்கக் கடலில் ‘டித்வா’ புயல் உருவானதை அடுத்து மீனவா்கள் தொடா்ந்து கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத் துறையினா் அறிவித்தனா். இதையடுத்து மீனவா்கள் தொடா்ச்சியாக கடலுக்குச் செல்லவில்லை. பின்னா் வானிலை சீரானதை அடுத்து, 7 நாள்களுக்குப் பின்னா் நெல்லை மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
