கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அம்பையில் உடும்பு வேட்டை: இருவா் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்டதாக, இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
உடும்பு வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் வனத் துறையினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:25 pm

Syndication

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் பகுதியில் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்டதாக, இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக் கோட்ட சரகத்திற்குள்பட்ட சின்ன சங்கரன் கோவில் பகுதியில் சிலா் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த முருகன் மகன் சங்கரசுப்பு, விக்கிரமசிங்கபுரம், மேலக் கொட்டாரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி ஆகியோா் உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் வனத் துறையினா் கைது செய்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதைத்தொடா்ந்து, இருவரும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.