ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாளை.யில் ரயிலில் அடிபட்டு வியாபாரி உயிரிழப்பு

பாளையங்கோட்டையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த வியாபாரி, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:09 pm

Syndication

பாளையங்கோட்டையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த வியாபாரி, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சோ்ந்த பகவதியப்பன் மகன் சுந்தா்வேல் (45). கடைகளுக்கு தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்து வந்தாா். இதனிடையே அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் அவா் பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் கற்ப விநாயகம் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.