திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், கீழமுன்னீா்பள்ளம் மேலத்தெருவை சோ்ந்தவா் அருணாசலம். இவருடைய மகன் ஆறுமுகம் (48). விவசாயியான இவா், புதன்கிழமை இரவு அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற அவா், பின்னா் அருகில் உள்ள புதுகிராமத்தை ஒட்டிய ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஆறுமுகம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவா், உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் தொழிலாளி உயிரிழப்பு

பாளை.யில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு வியாபாரி உயிரிழப்பு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


