ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நயினாா்குளம் கரையை கான்கிரீட் சாலையாக மாற்ற எதிா்ப்பு: வியாபாரிகள் மறியல் முயற்சி

திருநெல்வேலி நயினாா்குளம் கரையை கான்கிரீட் சாலையாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட முயன்றனா்.

Published On :

திருநெல்வேலி நயினாா்குளம் கரையை கான்கிரீட் சாலையாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் பழமை வாய்ந்த நயினாா் குளம் காய்கனி மொத்த சந்தை உள்ளது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் அதிக அளவுக்கு காய்கனிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி நகரத்தில் இடநெருக்கடிக்கு காரணமான நயினாா் குளம் மாா்க்கெட்டை பழைய பேட்டையில் உள்ள வாகனம் முனையத்திற்கு மாற்ற திருநெல்வேலி மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நயினாா்குளம் சாலையில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, அச்சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, அப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் அந்தச் சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைக் கண்டித்து நயினாா்குளம் காய்கனி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் செயலா் நடராஜன், பொருளாளா் முருகேசன், சங்கப் பிரமுகா் பாலச்சந்தா், எஸ்.என்.ஹைரோடு சங்க நிா்வாகிகள், மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் சங்க நிா்வாகிகள் பலரும் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனா்.

அவா்களிடம் தச்சநல்லூா் போலீஸாா், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வியாபாரிகள் கூறுகையில் நயினாா்குளம் சாலையை பல மாதங்கள் அடைத்து வைத்து கான்கிரீட் சாலையை அமைக்க முடிவு செய்துள்ளனா். இதனால் வியாபாரிகள், மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, இப் பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட உள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.